BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 10 September 2013

மிஸ்.வேர்ல்ட் 2013 இறுதி போட்டியை பாலியில் நடத்த முடியாது என நிர்வாகம் அறிவிப்பு - முஸ்லீம் அமைப்புகள் போராட்டம்

இந்தோனேசியாவில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் 2013 இறுதி போட்டியை பாலி தீவில் நடத்துவது வாய்ப்பில்லாத ஒன்று என அழகி போட்டு நடத்தும் நிர்வாகம் அறிவிப்பு


2013 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இந்தோனேஷியாவின் பாலித் தீவில் தொடங்கியுள்ளது. இந்தோனேசிய முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக உள்ள நாடு, பாலி தீவு மட்டும் இந்துக்கள் பெரும்பாண்மையாக இந்தியர்கள் வாழ்கிறார்கள், இந்த பாலிதீவு சுற்றுலாவாசிகளுக்கு கொண்டாட்டமான தீவு. சில ஆண்டுகளுக்கு முன் கிளப்புகளில் சில முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு வைத்து 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகில் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் உலக அழகி போட்டியை நடத்துவதை சில முஸ்லீம் அமைப்புகள் தீவிரமாக எதிர்த்தன, உலக அழகி போட்டி போர்னோகிராபியை தூண்டுவதாகவும், ஆபாசமானதாகும் என்று கூறி இந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த அமைப்புகளின் தீவிர எதிர்ப்பால் இறுதி போட்டியையும் பாலி தீவிலேயே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது, ஆனால் இறுதி போட்டியை பாலி தீவில் நடத்துவது என்பது வாய்ப்பில்லாத ஒன்று என்றும் அனைத்தையும் பாலிதீவிலேயே நடத்தும் அளவுக்கு இட வசதி மற்றும் முன்னேற்பாடுகள் இல்லை என்றும் நிர்வாகம் கூறியுள்ளது

# உலக அழகி போட்டிகள் அழகை ஆராதிக்குமா? ஆபாசத்தை அதிகரிக்குமா? உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media