BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 September 2013

கிஷோர் கே ஸ்வாமி Vs நடிகை ஸ்னேகா

ஃபேஸ்புக் பிரபலம் கிஷோர் கே ஸ்வாமி தன்னை பற்றி அவதூறு செய்ததாக இன்று புகார் அளிக்கிறார் நடிகை ஸ்நேகா?
சில தினங்களுக்கு கிஷோர் கே ஸ்வாமி தன் ஃபேஸ்புக் கணக்கில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நீக்கம் தொடர்பாக குறிப்பிடும்போது நடிகை ஸ்நேகா குறித்து குறிப்பிட்டிருந்தார், இது அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி இன்று கிஷோர் கே ஸ்வாமி பற்றி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஸ்நேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா சில அதிகாரிகளை கொண்டு தன்னை மிரட்டியதாக சில தினங்களுக்கு முன் கிஷோர் கே ஸ்வாமி தனது பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டிருந்தார்.

கிஷோர் கே ஸ்வாமி பற்றி ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஊடகவியலார் கவின்மலர் போன்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.

கிஷோர் கே ஸ்வாமியின் ஃபேஸ்புக் தகவல்கள் சமூகத்தில் முற்போக்காக வலம்வருபவர்களின் பல உள்விளையாட்டு அரசியல்கள் மற்றும் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை அம்பலப்படுத்துகின்றன,ஆனால் இவைகள் உண்மையா? அல்லது வெறும் கிசு கிசுவா? என்று புரிந்து கொள்ளாத நிலையில் உள்ளன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media