BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 October 2013

1000 டன் தங்க புதையல், உத்திரபிரதேச அரசின் உச்சகட்ட காமெடி

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே கெடா எனும் கிராமத்தில் மன்னர் ராஜா ராவ் ராம் பாக் சிங் என்பவரது சிதிலமடைந்த கோட்டை உள்ளது.
இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்டார்,  சில நாட்களுக்கு முன் சோபன் சர்க்கார் என்ற சாமியார் கனவில் தோன்றிய மன்னர்  1,000 டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறியதாகவும் எனவே அதை தேட வேண்டும் என்றும் கூறியதை ஏற்ற உபி அரசு நேற்று இரண்டாம் நாளாக தங்க புதையல் தேடும் பணியை மேற்கொண்டது.

எந்த வரலாற்று ஆதாரங்களோ, குறிப்புகளோ இல்லாமல் வெறுமனே ஒருவர் கனவில் வந்த விசயத்தை வைத்து உபி அரசு இப்படி செயல்படுவதை பலரும் விமர்சித்துள்ளார்கள், அதே சமயம் இந்த சிதிலமடைந்த கோட்டையை பிரபலப்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டுமென்று உள்நோக்கத்தோடு இதை கிளப்பிவிட்டதாகவும் சிலர் விமர்சிக்கின்றனர்.

# கனவில் வந்து சொன்ன மன்னர் இடத்தையும் சரியா சொல்லிட்டு போக வேண்டியது தானே!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media