BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 October 2013

தினுசு தினுசா தங்கம் கடத்துறாங்கப்பா... துபாயிலிருந்து 30 கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து தங்கம் எடுத்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதிலிருந்து தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது, துபாயிலிருந்து முகமது முஸ்தபா என்பவர் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள 30  கிலோ தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து துபாயிலிருந்து வந்த முகமது முஸ்தபாவை மடக்கிய கஸ்டமஸ் அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை, பிறகு விசாரித்ததில் ஏர் இந்தியா விமான கழிவறையில் பதுக்கி வைத்து விட்டு வந்துள்ளதாகவும், அந்த தங்கத்தை டெல்லிக்கு செல்ல விமானம் ஏறியுள்ள நால்வரும் கழிவறையில் பதுக்கி வைத்து இருக்கும் 30 கிலோ தங்கத்தை எடுத்து டெல்லிக்கு கொண்டு செல்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதை அடுத்து உடனடியாக ஏர் இந்திய விமானத்திற்குள் நுழைந்த அதிகாரிகள் அங்கு இருந்த கடத்தல் காரர்கள் நால்வரையும் மற்றும் அவர்கள் பதுக்கி வைத்து இருந்த 30  கிலோ தங்கத்தையும் கைப்பற்றினர்.

இப்படி ஏர் லைன்ஸ் விமானக் கழிப்பறையில் வைத்து நூதன முறையில் தங்கத்தை  கடத்தியது இதுவே முதல் முறை என்கின்றனர் கஸ்டமஸ் அதிகாரிகள்.

# பயபுள்ள எவனோ கூட இருந்தே போட்டு கொடுத்து இருக்கான் பாருங்க முஸ்தபா!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media