BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 October 2013

தெலுங்கானா பிரிப்பை எதிர்த்து ஆந்திராவில் மரம் வெட்டி போராட்டம்

தெலுங்கானா பிரிப்பை எதிர்த்து ஆந்திராவில் மரம் வெட்டி போராட்டம், சீமாந்திரா முழுவதும் மின்சாரம் துண்டிப்பு



மரம் வெட்டி சாலைகளில் தடை ஏற்படுத்தும் போராட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது 1987ல் தனி இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்திய சாலைமறியல் போராட்டம் தான், அதே பாணியில் தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து வெங்கடேஸ்வரா பல்கலை கழக மாணவர்கள் திருப்பதி செல்லும் வழிகளில் மரத்தை வெட்டி போட்டு சாலைமறியல் செய்து போராடுகின்றனர்.

மேலும் இந்த போராட்டத்தில் 30 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர், இதனால்
சீமாந்திரா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இதனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் உண்ணாவிரதம் இருக்க, சந்திரபாபு நாயுடுவோ டெல்லி சென்று உண்ணாவிரதம் இருக்க அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் வேளையில் தெலுங்கானா நாடகம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media