கட்சிகள் தங்கள் சின்னங்களை பொது இடங்களிலோ, பொதுவான விஷயங்களிலோ பயன்படுத்தக்கூடாது என்பது தேர்தல் விதி.இதன்படி இப்பொழுது தேர்தல் நடக்கவிருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமர்சந்த் தேர்தல் ஆணையத்திற்க்கு ஒரு மனு எழுதியுள்ளார்.அதில், "தாமரை பி.ஜே.பி யின் சின்னமாதலால் அதை பார்க்கும்பொழுதெல்லாம் மக்களுக்கு பி.ஜே.பி யின் நினைவே வரும்.அதனால் மாநிலம் முழுவதும் அனைத்து குளங்களிலும் வளரும் தாமரைப்பூக்களை தேர்தல் ஆணையம் மறைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதற்கு பதிலளித்த பி.ஜே.பியினர்,"இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்,அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் கைகளை ஒளித்து வைத்துக்கொள்ளுவார்களா??" என்று கேள்வி எழுப்பினர்.
# உங்க அறிவை கண்டு நாங்க வியக்கோம் காங்கிரஸ்கார்.................................
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.