BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 20 November 2013

546 ரன்கள் அடித்த 14 வயது சிறுவன் பிருத்வி ஷா! அடுத்த டெண்டுல்கர்!

546 ரன்கள் அடித்த 14 வயது சிறுவன் பிருத்வி ஷா! அடுத்த டெண்டுல்கர்! இந்தியாவின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்


பிரித்வி ஷா என்கிற 14 வயது சிறுவன் தற்போது  16 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார், இவர் ஹேரிஸ் கேடயத்துக்கான போட்டியில் ஒரே இன்னிங்ஸ்சில் 546 ரன்கள் அடித்துள்ளார், 330 பந்துகளில் 85 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை அடித்து இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். எல்லாவகை கிரிக்கெட்களிலும் இதுவே இந்தியாவில் தனி நபர் ஒருவர் அடித்த மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இது சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது.

ஒரு டெண்டுல்கர் ஓய்வு பெற்றால் ஓராயிரம் டெண்டுல்கரை இந்தியாவிலிருந்து பெறலாம், இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை.

# வாழ்த்துகள் பிருத்வி ஷா


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media