BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 28 November 2013

வைஷ்ணவி கல்யாணத்துக்கு மதுரை ஆதீனம் கொடுத்த 25 இலட்சம், இமக போலிசில் புகார்

வைஷ்ணவி கல்யாணத்துக்கு மதுரை ஆதீனம் கொடுத்த 25 இலட்சம், இமக போலிசில் புகார்

மதுரை ஆதீன மட‌த்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், பல கோடி ரூபாய் வருமானமும் உண்டு,
இந்த மடத்தின் ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார், இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உண்டு, 1500 ஆண்டுகள் பழமையான இந்த மடத்தை முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மதுரை ஆதீனத்தின் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் அவரது குடும்பத்தினர் என்று குற்றம் சாட்டி வைஷ்ணவியின் கல்யாணத்துக்கு மதுரை ஆதீனம் 25 இலட்சம் ரூபாய் மடத்தின் பணத்தை கொடுத்துள்ளதாகவும் இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டி அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மதுரை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் மடத்தின் சொத்துகளிலிருந்து 750 கோடி ரூபாய் வரை ஆதீனமும் வைஷ்ணவியும் மோசடி செய்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

# காசு பணம் துட்டு குட்டி மணி மணி


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media