தெஹல்கா.காம் இணைய பத்திரிக்கையை தெரியாதவர்களே இருக்க முடியாது,
வாஜ்பாய் பிரதமராக இருந்த பாஜக ஆட்சி காலத்திலும் அதன் பின்பு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பல ஸ்டிங் ஆப்பரேசன்கள் நடத்தி பல பிரச்சினைகளை அரசியல்வாதிகளின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்தது, தற்போது அந்த பத்திரிக்கைக்கே பிரச்சினை வந்துள்ளது.
தெஹல்கா தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவாவில் நடைபெற்ற விழா ஒன்றில் உடன் வேலை செய்யும் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இது குறித்து நிர்வாகத்துக்கு அப்பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருக்கிறார். வயதான தருண் தேஜ்பால் அவர்து மகள் வயதிருக்கும் தம்மிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக அப்பெண் பத்திரிகையாளர் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக அலுவலகத்தில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் தருண் தேஜ்பால் மின் அஞ்சல் தன்னுடைய முறைகேடான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மேலும் தாம் ஆசிரியர் பொறுப்பில் இருந்து 6 மாத காலம் விலகிக் கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
# ஊருக்கெல்லாம் ஸ்டிங் ஆப்பரேசன் செய்கிறவங்க ஆபிஸ்லயே நாத்தம் பிடித்த வேலை நடந்துள்ளதே!
# எங்க ஊரிலும் மன்மத"ராஜா"க்கள் இருக்கிறார்கள், ஒரு டிவியில் வெளியே அனுப்பினால் அடுத்த டிவியில் உடனே வேலை போட்டு தருவார்கள் அந்த மன்மத"ராஜா"வுக்கு
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.