BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 2 December 2013

கேரளாவில் பெங்களூர் ஐடி புரொபஷனல் ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழிக்கப்பட்ட கொடூரம்

கேரளாவில் பெங்களூர் ஐடி புரொபஷனல் ஹை கிளாஸ் ரிசார்ட்டில் கற்பழிக்கப்பட்ட கொடூரம், செய்தது செக்யூரிட்டிகளா? அல்லது சக ஊழியர்களா?


பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் 40 வயது பெண் தனது நிறுவன ஊழியர்களுடன் கேரளாவில் உள்ள ஸ்டார் ஓட்டலான பூவார் ஐலேண்ட் ரிசார்ட்(Poovar Island resort) இல் தங்கியிருந்தார், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு அவரது அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது, கதவை திறக்கும் முன்பு பால்கனி வழியாக இருவர் புகுந்து விட ஒருவன் அவரை தரையில் படுக்க வைத்து பிடித்துக்கொள்ள மற்றொருவன் கற்பழித்துள்ளான்.

இது குறித்து போலிசிடம் புகார் அளித்தார் அவர், இந்த ரிசார்ட்டுக்குள் வெளியாட்கள் நுழைய முடியாது, மேலும் இரவு 8 மணிக்கு மேல் படகு போக்குவரத்தும் இல்லை என்பதால் இதை ரிசார்ட் ஊழியர்களோ அல்லது அந்த பெண்ணின் நிறுவனத்தின் சக ஊழியர்களோ செய்திருக்க வேண்டும் என்று போலிஸ் கருதுகிறது. நான்கு நாட்களாக விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண் தனது ஸ்டேட்மெண்ட்டை பதிவு செய்துவிட்டு பெங்களூர் வந்துள்ளார்.

இது குறித்து கேரளாவின் பெண்கள் கமிஷனும் விசாரணை நடத்தி ரிசார்ட்டில் செக்யூரிட்டி பலவீனமாக உள்ளது என்றும் 15 ஏக்கர் ரிசார்ட்டுக்கு வெறும் 7 பாதுகாவலர்கள் தான் உள்ளனர் என்றும், கதவுகள் தாழ்பாள்கள் மிக எளிதாக உடைக்க முடியும் என்றும் விசாரணைக்கு பின் கூறியுள்ளார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media