BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 5 December 2013

குழந்தை பிறந்த 20 நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை

குழந்தை பிறந்த 20 நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா (20).
இவர் மணி என்பவரை ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவருக்கும் இடையில் எப்போதும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருந்தது.

20 நாட்களுக்கு முன்பு தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தீபாவை பார்க்க கணவர் மணி சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதை அடுத்து மணி தனது மனைவியை தலையில் அடித்துள்ளார், சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் தீவிர சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மணியை கைது செய்த போலிசார் விசாரணை நடத்தியதில் காதல் திருமணம் செய்தாலும் இருவருக்கும் எப்போதும் சண்டை தகராறு நடந்து கொண்டே இருந்துள்ளது, குழந்தை பிறந்த பின் குழந்தையை பார்க்கும் போதும் கூட பெயர் வைப்பது தொடர்பாக தகராறு நடந்துள்ளது, அதன் பின் சமாதானம் அடைந்த மணி தனது மனைவியை மத்தியான நேரத்தில் குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் தீபாவை உடலுறவுக்கு அழைத்துள்ளார், மீண்டும் சண்டை ஆரம்பமாக கோபமடைந்த மணி தீபாவை தலையில் அடித்துவிட்டு ஓடிவிட்டதாக கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media