காரைக்காலில் இளம்பெண் ஒருவர் 15 பேர் கொண்ட இரண்டு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார், காவல்நிலையத்தின் பின் பக்கம் உள்ள ஒரு அறையில் வைத்து இப்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் திமுக எம்.எல்.ஏ நசீம்மின் தம்பியும் ஒருவர்,
கைது செய்யப்பட்டவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளாரின் தம்பி மதன் என்பவரும் அடக்கம். கற்பழிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை உடனடியாக பதிவு செய்யாமல் இந்த இரண்டு கும்பல்களுடனும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கட்டை பஞ்சாயத்து நடந்துள்ளது.
உளவுப்பிரிவு போலிசார் ஒருவர் காவல்துறையின் மேல் அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கொடுக்க புதுவை முதுநிலைக்கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் அவர்கள் நேரடியாக தலையிட்டு எம்.எல்.ஏவின் தம்பி, மாவட்ட செயலாளரின் தம்பி என்று எல்லாம் செல்வாக்குடையவர்கள் என்று பார்க்காமல் கற்பழித்த இரண்டு கும்பல்கள் மீதும் புகார் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க செய்தார்.
மேலும் வழக்கு பதிவு செய்யாமல் கட்டை பஞ்சாயத்து நடத்திய எஸ்.ஐ மற்றும் ஏட்டுவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.
அரசியல் செல்வாக்கிற்கு அஞ்சாமல் நடவடிக்கை எடுத்த வீரமங்கை முதுநிலைக்கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் அவர்களை வாழ்த்துகிறோம்.
# மோனிகா பரத்வாஜ் போன்றோரின் சேவை, நாட்டுக்குத்தேவை
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.