BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 8 February 2014

14 வயது வடகிழக்கு மாநில சிறுமி டில்லியில் கற்பழிப்பு

வடகிழக்கு மாநில எம்.எல்.ஏ ஒருவரின் மகன் நிடோ டேனியா சமீபத்தில் டில்லியில் கேலி கிண்டல் செய்யப்பட்டு அடித்துக்கொள்ளப்பட்டார்,  இதை அடுத்து டெல்லியில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான ரேசிசம் தீவிரமாக வெளிப்படுகிறது.

இந்நிலையில் டில்லியில் வசிக்கும் 14 வயது மணிப்புரி பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை அன்று தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மெடிக்கல் பார்மசி கடையில் மருந்து வாங்க சென்றார், அந்நேரத்தில் விக்கி என்பவன் அந்த பெண்ணை கடத்தி அருகில் இருந்த அறைக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்துள்ளான்.

சிறிது நேரம் கழித்து நடக்க முடியாமல் தன் வீட்டிற்கு திரும்பிய பெண் தன் வீட்டாரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார், மேலும் அப்பெண்ணுக்கு ரத்தப்போக்கும் நிற்காமல் இருந்துள்ளது, அருகில் இருந்த போலிசில் புகார் அளித்து பின் அருகில் இருந்த சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கற்பழித்தவன் விக்கி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது இவன் இந்த பகுதியின் நில உரிமையாளரின் மகனாவான். Protection of Children from Sexual Offences (POCSO) சட்டப்படி வசந்த் விகார் போலிசார் வழக்கு பதிவு செய்து இவனை கைது செய்துள்ளார்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media