BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 February 2014

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு - மனைவி புகார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார், மேலும் பல டிவிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலமானவர், இவர் மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் மீது ஒரு புகார் அளித்தார்.


அந்த புகாரில் அவர் தான் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிப்பதாகவும் அவருக்கும்  இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தனுக்கும் கடந்த 1991-ல்  திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவமுறைப்படி திருமணம் நடந்தது என்றும் திருமணம் நடந்து 23 வருடங்கள்  ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவர்களுக்கு ஷில்பா என்ற மகளும் சச்சின் என்ற மகனும் உள்ளனர்.

அவரது கணவர்  ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால்  அவர்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார், வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவியான ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார் ஜேம்ஸ் வசந்தன் என்று குற்றம் சாட்டிய அவரது மனைவி சுகந்தி தற்போது அவரையே தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

 உண்மையான மனைவி தான் உயிரோடு இருக்கும்போது தன்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது தனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக காவல்துறையில் புகார் மனு கொடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் ஜேம்ஸ் வசந்தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மலையாள மூதாட்டி ஒருவர் ஜேம்ஸ் வசந்தன் தன்னை அசிங்கமாக பேசியதாக புகார் அளிக்க பல போலிஸ்காரர்கள் வந்து ஜேம்ஸ் வசந்தனை கைது செய்து இழுத்து சென்றார்கள், அப்போது ஜேம்ஸ் வசந்தன் இது சென்னை கமிஷனர் தலையீட்டில் நடந்தது என்று தெரிவித்திருந்தார்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media