நரேந்திர மோடி பங்கேற்று பேசும் தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றே குறிப்பிட்டு வந்தார். அவர் அவ்வாறு அழைத்தது பற்றி கோபம் வரவில்லையா, உணர்ச்சி வசப்படவில்லையா என ராகுல் காந்தியிடம் பிரபல செய்தித்தாளின் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கேட்டபோது, அவர் அளித்த பதிலாவது:
மற்றொருவரின் கோபமூட்டும் பேச்சை நான் கேட்கவோ, உணர்ச்சிவசப்படவோ தேவையில்லை. ஒருவருக்குக் கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கும். அவர் கோபத்தையும் வெறுப்பையும் சுமந்து திரிகிறார். அது என்னை ஒன்றும் செய்யாது. அது அவரைத்தான் தாக்கும். மோடி என்னை எப்படி அழைக்க விரும்புகிறார், எந்த விதமான வசைச்சொற்களை என்மீது வீச விரும்புகிறார் என்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரோடு சம்பந்தப்பட்டது.
ஒரு சின்ன கதை சொல்கிறேன். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் உட்கார்ந்திருந்தபோது, வேகமாக வந்தார் ஒருவர். புத்தரைப் பார்த்து அவர் வசைமாரி பொழிந்தார். சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர்: “அவர் உங்களை வசைபாடினார், அவமதித்தார், நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை, எதுவும் செய்யவில்லை?” என்று கேட்டனர். புத்தர் அவர்களுக்குப் பதில் சொன்னார்: “அவர் கோபத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார். அந்தப் பரிசுடன் அவர் சிறிது நேரம் இங்கே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பரிசை நான் ஏற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பரிசுடன் அவர் திரும்பிவிட்டார்.
அப்படித்தான். மோடி கொண்டுவரும் இதுபோன்ற பரிசுகளை நான் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவரே அவருடன் வைத்துக்கொள்ளட்டும். மோடி கொண்டுவரும் பரிசான இந்தக் கோபமே அவரை வீழ்த்திவிடும்.
இவ்வாறு ராகுல் காந்தி பதிலளித்தார்.
மற்றொருவரின் கோபமூட்டும் பேச்சை நான் கேட்கவோ, உணர்ச்சிவசப்படவோ தேவையில்லை. ஒருவருக்குக் கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கும். அவர் கோபத்தையும் வெறுப்பையும் சுமந்து திரிகிறார். அது என்னை ஒன்றும் செய்யாது. அது அவரைத்தான் தாக்கும். மோடி என்னை எப்படி அழைக்க விரும்புகிறார், எந்த விதமான வசைச்சொற்களை என்மீது வீச விரும்புகிறார் என்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரோடு சம்பந்தப்பட்டது.
ஒரு சின்ன கதை சொல்கிறேன். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் உட்கார்ந்திருந்தபோது, வேகமாக வந்தார் ஒருவர். புத்தரைப் பார்த்து அவர் வசைமாரி பொழிந்தார். சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர்: “அவர் உங்களை வசைபாடினார், அவமதித்தார், நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை, எதுவும் செய்யவில்லை?” என்று கேட்டனர். புத்தர் அவர்களுக்குப் பதில் சொன்னார்: “அவர் கோபத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார். அந்தப் பரிசுடன் அவர் சிறிது நேரம் இங்கே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பரிசை நான் ஏற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பரிசுடன் அவர் திரும்பிவிட்டார்.
அப்படித்தான். மோடி கொண்டுவரும் இதுபோன்ற பரிசுகளை நான் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவரே அவருடன் வைத்துக்கொள்ளட்டும். மோடி கொண்டுவரும் பரிசான இந்தக் கோபமே அவரை வீழ்த்திவிடும்.
இவ்வாறு ராகுல் காந்தி பதிலளித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.