BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 31 May 2014

கர்நாடகாவிலிருந்து ப.சிதம்பரத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப சித்தராமையா எதிர்ப்பு

கர்நாடகாவில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 4 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று  நடைபெற்ற போது, சிதம்பரம் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்பொழுது கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசுகையில், “கர்நாடகாவுடன் துளியும் தொடர்பில்லாத தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்தை இங்கிருந்து தேர்வு செய்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். ஏனென்றால் கன்னடர் களை புறக்கணித்துவிட்டு வேறு மாநிலத்தில் இருப்பவரை தேர்வு செய்தால் கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்படும். அவரைத் தேர்ந்தெடுப் பதற்கு பதிலாக கர்நாடகாவில் இருக்கும் தகுதியான தலைவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்'' என கூறினார்.

திக்விஜய் சிங், 'அவர் (சிதம்பரம்) தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதைக் கணித்து போட்டியிடுவதைத் தவிர்த்தார். இதனால் கட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டது'' என ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media