உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டு, கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 5-வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் பெயர் தெரியாத 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
2 போலீஸ் உட்பட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 போலீசாரும், பப்பு யாதவ், அவதேஷ் யாதவ் மற்றும் உர்வேஷ் யாதவ் ஆகிய 3 சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் உத்தர பிரதேச மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விரைவு நீதிமன்றம் மூலம் உடனடியாக குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.