காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து ராஜஸ்தான் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா, " ராகுல் காந்தி திசை தெரியாமல் செல்கிறார். அவருக்கு கொள்கை எதுவும் இல்லை. அரசியல் தெரியாதவர்கள் அவருக்கு ஆலோசகர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் சர்க்கஸ் கம்பெனி யில் உள்ள கோமாளிக் குழுவின் நிர்வாக இயக்குநர் ராகுல் காந்தி. மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுலும் அவரது ஆலோசகர்களுமே காரணம். ராகுல் மீது பாசம் காட்டுவதை விட்டுவிட்டு கட்சியை வலுப்படுத் தும் நடவடிக்கைகளை கட்சித் தலைவர் சோனியாகாந்தி மேற் கொள்ள வேண்டும்." என்று கடுமையாக பேசியிருந்தார். அவர் அவ்வாறு பேசியதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் பொறுப் பில் உள்ள குருதாஸ் காமத் உத்தரவின்படி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் நடவடிக்கை குறித்து சர்மாவிடம் கேட்டதற்கு, ‘இது பற்றி கவலை இல்லை; ராகுல் பற்றி நான் சொன்னது சரியானதுதான்’ என்று கூறினார்.
காங்கிரஸ் நடவடிக்கை குறித்து சர்மாவிடம் கேட்டதற்கு, ‘இது பற்றி கவலை இல்லை; ராகுல் பற்றி நான் சொன்னது சரியானதுதான்’ என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.