ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் இன்று (ஜூன் 2) அதிகாரப்பூர்வமாக பிரிந்தது. மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர் ராவ் காலை 8.15 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இவருடன் 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஆளுநர் இ.எஸ்.எல் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் 9 மணியளவில் மாநிலம் உதயமானதையொட்டி அரசு சார்பில் விழா நடைபெற்றது. மதியம் 12.57 மணிக்கு தலைமைச் செயலகத்தில், தெலங்கானா மாநிலத்தின் புதிய முத்திரை அங்கீகாரத்திற்காக கையொப்பமிடுகிறார்.
பின்னர், மாநில பிரிவினைக்காக உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் மற்றும் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கும் கோப்பில் கையெழுத்திடுகிறார்.
சந்திரசேகர ராவின் பதவி ஏற்பு விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட எந்த மத்திய அமைச்சருக்கும் டி.ஆர்.எஸ் கட்சி அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் சந்திர சேகர ராவ் கூறுகையில் “நான் தற்போது எந்த பதவியிலும் இல்லை. மேலும் புதிய மாநிலத்தில் இதுவரை மாநில டி.ஜி.பி மற்றும் முதன்மை செயலாளர்கள் போன்ற முக்கிய உயர் அதிகாரிகளை நியமனம் செய்யவில்லை. இன்னமும் 15 நாட்களில் மாநிலம் உருவானதற்கான விழா அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு பிரதமர் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.