BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 14 July 2014

சிகிச்சை பெறுவதற்காக விஜய்காந்த் சிங்கப்பூர் சென்றார்

 தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சரியான பின்பு அவர் வீடு திருப்பினார். ஆனால் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டு வந்தது.



இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார். இந்த பய்ணம் குறித்து எந்த தகவலும் இல்லாததால் தொண்டர்கள் யாரும் விமான நிலையத்திற்கு வரவில்லை.

அவர் அங்கு தங்கி இருந்து உடல் நலம் சரியான விடன் இங்கு திரும்ப உள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media