வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட 20 தனிநபர் மசோதாக்கள், மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதை வலியுறுத்தும் இரு வேறு மசோதாக்களை பாஜக உறுப்பினர்கள் வருண் காந்தி, ஜனார்த்தன் சிங் ஆகியோர் அறிமுகம் செய்தனர். பசுக்களைப் பாதுகாப்பது தொடர்பான மசோதாவை, சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த் காய்ரே அறிமுகம் செய்தார். அமில விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், அமில வீச்சைத் தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வளித்தல் ஆகிய ஷரத்துகளை உள்ளடக்கிய மசோதாவை பிஜு தனதா தள உறுப்பினர் மஹதாப் அறிமுகம் செய்து வைத்தார். வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மற்றொரு மசோதாவையும் அவர் அறிமுகம் செய்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.