பிரியாணிக்கு ஆசைப்பட்டு வாந்தி பேதி புடுங்கிருச்சே.
ஈரோட்டில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோழி பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து 82 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் நேற்று நடைபெற்றது, இதில் அதிரடி புகழ் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர், இதில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன , இதை எடுத்துச் சென்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 82 திமுகவினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
#தொண்டர்களுக்கு கடசியில் மிஞ்சுவதே இந்த பிரியாணி லெக்பீஸ்சும் குவார்ட்டரும் தான், அதைக்கூட நல்லதா போட முடியவில்லையா?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.