BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 May 2013

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்குகிறது பாமக. - அன்புமணி அறிவிப்பு

மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்குகிறது பாமக. - அன்புமணி அறிவிப்பு

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கச் சென்றவர்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது, இதில் இரண்டு வன்னியர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியது ஆனால் கொல்லப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் அரசு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி கொல்லப்பட்ட கட்சி தொண்டர்கள் இருவர் குடும்பத்திற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. அரசால் பழி வாங்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 89 பேர் இதுவரை குண்டர் சட்டத்திலும், தேசியப்பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இவர்களின் குடும்பத்திற்கான நிதி மற்றும் பொருள் உதவிகளை கட்சி வழங்கும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சட்ட உதவி வழங்குதல் மற்றும் அதற்கான அனைத்துச் செலவுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியே ஏற்றுக் கொள்ளும் என்று அறிக்கையில் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

#தொண்டர்களை கட்சி கைவிட்டால் கட்சியை தொண்டர்கள் கைவிட்டு விடுவார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து வைத்துள்ளார் போல சின்ன டாக்டர்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media