சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் விஜயகர் என்ற நபர் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதால், அந்த குடியிருப்பு வாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த விஜயகர் என்ற நபர் இன்று காலை 10 மணியளவில் சாலைக்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது வீட்டுக்குள் மீண்டும் புகுந்து கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். தன்னைத் தானே சுட்டுக் கொல்வேன் என மிரட்டியதைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஐபிஎல் சூதாட்டத்தில் ஆரம்பித்து சினிமா வரை ஏகப்பட்ட பிரச்சினைகளை பற்றி கூறிவருகிறார், ஆனால் கடந்த 3 மாதமாக வாடகையை தரவில்லையாம்.
இது அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் நேரடி கவரேஜ்ஜாக வெளியாகிறது
கீழ்பாக்கம் துப்பாக்கி விஜய்கர் கைது செய்யப்பட்டார், அவரது வீட்டில் போலிஸ் சோதனை நடைபெறுகிறது
காலை 10 மணியிலிருந்து ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு அலப்பறை செய்து கொண்டிருந்த விஜய்கர் கைது செய்யபட்டார். காலையிலிருந்து எல்லோரையும் டரியல் ஆக்கிய விஜய்கர் ஒரு முறை குளித்து வேறு சட்டை மாற்றியுள்ளார்.
#கீழ்பாக்கம் கேஸ்ங்கறது சரியாத்தான் இருக்கிறது.
#இவனுங்க கையில் எல்லாம் துப்பாக்கி எப்படி கிடைத்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.