கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா? அனுமதிபெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடியது தொடர்பாக அனைத்து மினரல் வாட்டர் நிறுவனங்களின் ஸ்ட்ரைக்.
திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன?
ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது.
சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம்.. தெரிவித்துள்ளார்.
மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.
#தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.