BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 May 2013

ஓட்டுக்கோ படையாட்சி சாதி, டிவியிலோ சாதியில்லை முழக்கம் இது தான் முற்போக்கு


ஓட்டுக்கோ படையாட்சி சாதி, டிவியிலோ சாதியில்லை முழக்கம் இது தான் முற்போக்கு

சிதம்பரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன், மற்ற பல கம்யூனிஸ்ட் தோழர்களை போலவே இவரும் நல்லவர், லஞ்சம் வாங்காதவர், எம்.எல்.ஏ பதவியை வைத்து கட்டைப்பஞ்சாயத்து செய்யாதவர், அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர், சொத்து சேர்க்காதவர். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்த இருந்த அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை எதிர்த்து கடும் முயற்சிகளுக்கு பின் அண்ணாமலை பல்கலையை அரசு கையகப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர், இதற்காக யாருக்கும் விலை போகாதவர்.

சமீபத்திய சாதி மோதல்கள் தொடர்பாக டிவியில் விவாதத்தில் வன்னியர்கள் சாதிவெறியோடு நடந்து கொள்கிறார்கள் என்றும் சாதியில்லை என்றும் வன்னியர் சங்கத்தையும் வன்னியர் சமூகத்தையும் கடுமையாக சாடி பேசினார்.

சென்ற தேர்தலில் இவர் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் தோழர் பாலகிருஷ்ணன் என்று மட்டும் எழுதாமல் பாலகிருஷ்ணன் படையாட்சி (படையாட்சி என்பது வன்னியர்களை குறிப்பது) என்று அவரது சாதிப்பெயரையும் இணைத்தே சுவர் விளம்பரங்கள் எழுதி வாக்கு கேட்டனர்.

அரசியலுக்கும் ஓட்டுக்கும் சாதிப்பெயரை சொல்வது, டிவியிலும் மேடையிலும் சாதியில்லை என்று முழங்குவது எல்லா கட்சிகளுக்கும் வழக்கமாகி போய்விட்டது.

Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media