BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 14 July 2013

தர்மபுரி இளவரசன் முன்பே கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் (படங்கள்)

தர்மபுரி இளவரசன் முன்பே கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் (படங்கள்)

சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்ட தர்மபுரி இளவரசனின் மரணத்தை சிலர் படுகொலையாக இருக்க கூடும் என்று சந்தேகித்தனர், இரயிலில் விழுந்திருந்தாலும் அவரது உடல் சிதறாமல் தலையில் மட்டுமே அடிபட்டிருந்ததால் சந்தேகம் வலுத்தது, சில நாட்களுக்கு முன் திருப்பமாக இளவரசனின் தற்கொலை கடிதத்தை சிலர் எடுத்து மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடிதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு தகவலாக இளவரசன் சென்னையில் வழக்கு விசயமாக வந்திருந்த போது திவ்யா தன் தாயாருடன் செல்லப்போவதாக கூறிய நிலையில் தி.நகர் லாட்ஜில் இடது மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது தாயார் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றி முதல் உதவி செய்துள்ளார், இதை ஹோட்டல் ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர். இளவரசன் இடது மணிக்கட்டில் கட்டுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இளவரசனின் தற்கொலை கடிதத்தை மறைத்தது, இளவரசன் தற்கொலை மனநிலையில் இருந்தார் என்பதை மறைத்து செயல்பட்டது எல்லாம் சில அமைப்புகள் இளவரசன் மரணத்தை பயன்படுத்தி சாதிகளுக்கிடையேயான பூசலை வளர்த்திக்கொண்டே இருக்க ஆசைப்பட்டுள்ளார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். இளவரசனின் தற்கொலை முயற்சி இளவரசனுடன் பேட்டி எடுத்த சில பத்திரிக்கை நிருபர்களுக்கும் தெரிந்தே இருந்தது என்றாலும் அவர்கள் அது குறித்து தகவல்கள் வெளியிடாமல் இது கொலையாக இருக்கும் என்றே சந்தேகம் எழுப்பியிருந்தனர்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media