BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 26 July 2013

இளவரசன் கடைசி நிமிடங்களில் பேசிய நண்பர்கள், ஐஐடி அப்பாயிண்ட்மெண்ட்கள் சிபிஐ விசாரணை

ஐஐடி சென்னையில் 1995முதல் 2000 வரை வேலை நியமணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

அனைத்து தகுதிகளும் இருந்தும் பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் ஐஐடியில் அசிஸ்டெண்ட் புரொபசராக இருக்கும் வசந்தா அவர்கள், தகுதியற்றவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட்டும் பதவி உயர்வும் வழங்கிய ஐஐடி சென்னை நிர்வாகம் அவருக்கு வழங்கவில்லை என்றும் சாதி ரீதியான ஒதுக்குதலுக்கு உள்ளானார் என்றும் குற்றம் சாட்டி மனு செய்திருந்தார், இதை விசாரித்த நீதிமன்ற இவ்வாறு உத்தரவிட்டது.


# ஐஐடி மானம் கப்பலேறுது.

---------
தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு முன் இரு நண்பர்களிடம் பேசிய தர்மபுரி இளவரசன்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இளவரசன் சென்னையில் இருக்கும் ஒரு நண்பரிடமும் சித்தூரில் இருக்கும் ஒரு நண்பரிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இவர்கள் இருவரிடமும் தனியாக விடப்பட்டது குறித்து ஆற்றாமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருந்திய அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இருவரிடமும் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சித்தூர் நண்பர் கார்த்திக் மற்றும் சென்னை நண்பர் மனோஜ் குமார் இருவரும் இது குறித்து ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில் மனோஜ்குமார் தெரிவித்ததாவது திவ்யாவை தாலி இல்லாமல் கோர்ட்டில் பார்த்ததும் திவ்யா தனது சகோதரருடன் சிரித்து பேசிக்கொண்டு கோர்ட்டிலிருந்து சென்றதும் தன்னை மிகவும் பாதித்ததாக இளவரசன் கூறியதாக கூறியுள்ளார்.

இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் இளவரசன் டார்ச்சர் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லையென்றும் கணமான இரும்பு பொருள் மண்டையில் தாக்கியதால் இறந்துள்ளார் என்றும் உடலில் கைமுறிவு தவிர வேறு காயங்கள் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது. ஓடும் இரயில் தாக்கியதால் இவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media