BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 1 August 2013

ஸ்நோடன்க்கு தற்காலிக அடைக்கலம் அளித்தது ரஷ்யா

ஸ்நோடன்க்கு தற்காலிக அடைக்கலம் அளித்தது ரஷ்யா, மாஸ்கோவிற்கு சென்றார் ஸ்நோடன்.

ஃபேஸ்புக் உட்பட்ட சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள், மின்னஞ்சல்கள், டெலிபோன் பேச்சுகளை அமெரிக்க ஏஜென்சிகள் உளவு பார்க்கின்றன என்ற தகவல்களை வெளியிட்ட ஸ்நோடன் ஜூன் 23ம் தேதி காங்காங்கிலிருந்து மாஸ்கோவுக்கு தப்பி ஓடினார், அங்கே அவருக்கு ரஷ்யாவினுள் நுழைய அனுமதி கிடைக்காததால் இத்தனை நாட்களாக ட்ரான்சிட் பகுதியிலேயே இருந்தார், இந்நிலையில் அவருக்கு ரஷ்யாவில் தற்காலிக அடைக்கலம் கிடைத்துள்ளதால் ட்ரான்சிட் பகுதியிலிருந்து மாஸ்கோவினுள் சென்றுள்ளார், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கியிருக்கும் இடம் வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா வெறி கொண்டு தேடி வரும் நபர்களில் முதன்மையானவர் ஸ்நோடன், இவருக்கு ஏற்கனவே ஈக்வடார் நாடு அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளது, ஈக்வடாரில் நுழைந்து விட்டால் அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media