BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 August 2013

சேரன் மகள் தாமினி காதல் வழக்கு, நீதிமன்றம் விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்துள்ளது.

சேரன் மகள் தாமினி காதல் வழக்கு, நீதிமன்றம் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்துள்ளது.

இயக்குனர் சேரன் மீது அவரது மகள் தாமினி தனது காதலரை கொல்ல முயற்சிக்கிறார் என்றும் தன்னை காதலருடன் சேர்த்து வைக்க கோரியும் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார், அதன் பின் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்தன. வழக்காமக பெண் மேஜரென்றால் பெற்றோர்கள் எவ்வளவு கதறினாலும் அந்த கதறலில் எவ்வளவு நியாயங்கள் இருந்தாலும் அதை எல்லாம் கேட்காமல் போலிசும் நீதிமன்றமும் மேஜர் என்று கூறி சட்டத்தை காண்பித்து காதலனுடன் அனுப்பி வைக்கும், ஆனால் பெண்ணோ பிரபலமானவரின் மகள், அவருக்கு ஆதரவாக கோலிவுட்டின் கலையுலகமே திரண்டுள்ளது, விவாதங்கள் டிவிகளில் அனல் பறக்கிறது, காக்கிச்சட்டையும் சரி நீதிபதியும் சரி நிதானமாக அணுகுகிறார்கள், பெண் மேஜராக இருந்தாலும் உடனடியாக காதலனுடன் அனுப்பி வைக்காமல் கவுன்சிலிங் செய்துகொண்டுள்ளார்கள், இன்று நடந்த வழக்கு விசாரணையில் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் இயக்குனர் சேரன் மகள் தாமினியை அவரது பள்ளி கரஸ்பாண்டண்ட் வீட்டில் தங்க அனுமதித்துள்ளனர், இதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.

# சேரன் மகளை அணுகவது போலவே இனி வரும் காலங்களில் காக்கி சட்டையும், நீதிமன்றமும் பிற காதலர்களையும் அணுகுமா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media