BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 August 2013

அமெரிக்கா படிக்க போக சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுக்கும் அரசு, காஷ்மீர் பெண்ணின் மாமா முன்னாள் தீவிரவாதியாம்

இரட்டை வேட மத்திய அரசு

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுஃபைரா கான் என்ற சிறுமி அமெரிக்க சென்று படிக்க அதற்கான கடினமான தேர்வு ஒன்று எழுதி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்

ஆனால் மத்திய அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டது, அதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் தான் மிக கேவலமானது

அந்த சிறுமியின் மாமா முன்னர் தீவிரவாதியாக இருந்து பின்னர் திருந்தி தண்டனை பெற்றவராம், அதுனால் அந்த சிறுமிக்கு பாஸ்போர்ட் தர முடியாது என சொல்லியிருக்கிறது.

ஆந்திரா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நக்ஸ்லைட்டாக இருப்பவர்களிடம் திருந்தி உங்கள் ஆயுதத்தை ஒப்படைத்து சரணடைந்தால் உங்களது மறுவாழ்விற்கும் உங்களது குடும்பத்தின் வாழ்விற்கும் உத்திரவாதம் அளிக்கும் மத்திய அரசு என்று ஒரு பக்கம் சொல்லி கொண்டு மறுபக்கம் மாமா முன்னாள் தீவிரவாதி என்பதால் ஒன்றும் அறியா சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுத்தது எவ்வகையில் நியாயம் என சில சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும் இந்த தகவல் பெரிதாக ஊடகத்தில் வராமல் இருப்பதும் இந்த சிறுமிக்கு நியாயம் கிடைப்பதை தடுக்கும் செயல் தான் என்பதே உண்மை.

அச்சிறுமியின் பேட்டி ஒன்றை கண்டு புலனாய்வு துறை அளித்த தகவலை அடுத்து அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்வியை தொடங்க வேண்டிய அந்த பெண் இனி எப்பொழுது போவார், அங்கே தாமதத்திற்கு என்ன காரணம் சொல்வார்!

ஊடகங்கள் தயவு செய்து செலிபிரட்டிகளின் செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வருவது சாதரண மக்களின் பிரச்சனைகள் மக்களுக்கு தெரியாமல் மறைத்து விடும், இனியாவது திருந்துமா சினிமா நடிகர்கள் பின்னால் மட்டுமே சுற்றும் ஊடகம்........


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media