BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 30 August 2013

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்



கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கான ஒப்பந்த உரிமையை வழங்காததால் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெறக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதை விசாரித்த நீதிபதில் கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறையும் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் அளித்துள்ளது. 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்றும், கச்சத்தீவு இலங்கை எல்லைக்கு உட்பட்டது என்பதால் திரும்பப் பெற முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media