BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 September 2013

கல்லூரிகளில் மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட்டுகள் அணியவும் பெண்கள் ஸ்லீவ் லெஸ் அணியவும் தடை





தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழக அரசின் உயர்கல்வித்துறை இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது, இந்த துறையின் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி கூறியதாவது கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் அணிந்து வரும் உடைகளில் சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளோம் என்றும் அவைகள் சில கல்லூரி முதல்வர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே செய்யப்படுகிறது என்றும் இது குறித்து விரிவான சர்க்குலர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டுகள் அணிய தடைவிதிக்கப்படும் என்றும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் அணிய தடைவிதிக்கப்படும் என்றும் தெரிகிறது, மாணவர்கள் ஃபார்மல் சட்டை, பேண்ட்டுகள் அணியவும் பெண்கள் சுடிதார் அல்லது புடவை அணிய வலியுறுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

இது தமிழக அரசின் உயர்கல்வித்துறையா? அல்லது கலாச்சார காவல்துறையா என்று மாணவர்கள் இந்த முடிவை விமர்சிக்கிறார்கள், நாங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை ஏன் இவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள் எங்கள் உடல் எங்கள் உரிமை என்கிறார்கள் மாணவர்கள்

உயர்கல்வித்துறையின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்!

# புடவையை விட கவர்ச்சியான ட்ரெஸ் எதுவும் இருக்குமா என்ன?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media