16வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக அந்த பெண் அளித்த புகாரில் நேற்று பிரபல சாமியார் ஹஸ்ரம் பாபு கைது செய்யப்பட்டார், இன்று அவர் ஜோத்பூர் கொண்டுவரப்படுவார் என போலிஸ் அறிவித்துள்ளது.
புதுடில்லி பேருந்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நடந்த நேரத்தில் குற்றவாளிகள் கற்பழித்தவர்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட பெண்ணும் தான் என்றும், பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளிகளை எதிர்து போராடாமல் நீங்கள் என் அண்ணன் தம்பிகளை போன்றவர் என்று அழுது அவர்கள் காலில் விழுந்திருந்தால் அவர்கள் கற்பழித்திருக்கமாட்டார்கள் என்று அறிக்கை விட்டு அனைவரிடமும் வாங்கி கட்டிக்கொண்டவர் தான் இந்த சாமியார் ஹஸ்ரம் பாபு.
இவரது ஆசிரமத்தின் மீது குஜராத்தில் நவ்சரி மாவட்டத்தில் பைரவி கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஆசிரமம் அமைக்க அளிக்கப்பட்டது, மேலும் 6 ஏக்கர் நிலத்தை வளைத்து போட்டு ஆசிரமம் கட்டியதில் நில அபகரிப்பு புகார் எழுந்தது, மேலும் மத்தியபிரதேசத்திலும் 700கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் உள்ளது.
# பாபுஜி டோண்ட் ஒர்ரி, ஜெயிலில் இருந்து வந்த பின் "நித்யானந்ததர்மம்" மாதிரி "ஹஸ்ரம்பாபு தர்மம்" என்று ஏதாவது ஒரு டிவியில் கட்டை பஞ்சாயத்து செய்துக்கலாம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.