BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 September 2013

சேதுத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டால், நாங்களும் உங்கள் கையை விட்டு விடுவோம். - திமுக தலைவர் கருணாநிதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பொன் விழா ஆண்டின் நிறைவு விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி சேது சமுத்திர திட்டம் திமுகவின் கனவுதிட்டம் என்றும்  சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.


ஆனால் இதற்கு மத்திய அரசு இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் சேதுத் திட்டத்தைக் கைவிடாதீர்கள் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்போம். ஒருவேளை, சேதுத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டால், நாங்களும் உங்கள் கையை விட்டு விடுவோம் இது ஒன்றும் பயமுறுத்தல் இல்லை. பாசத்தின் காரணமாக விடுக்கும் எச்சரிக்கை என்றார்.

சில மாதங்கள் முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தினால் திமுக மத்திய அரசிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் வெளியேறியதாக அறிவித்தார்கள், அதை திமுக தொண்டர்கள் வெடிவெடித்து ஸ்வீட் கொடுத்து கொண்டாடினார்கள், அதே காங்கிரசிடம் கனிமொழியை எம்பியாக்க ஆதரவு கோரினார், தற்போது ஏற்கனவே வெளியே வந்துவிட்ட கூட்டணியிலிருந்து மீண்டும் வெளிவரப்போவதாக கூறியுள்ளார்.

#அய்யோ பாவம், நீங்க வெளையாட்டா சொல்வதையெல்லாம் உடன்பிறப்புகள் நெஜம் என்று நினைத்துவிடுகிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media