12 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் செப்டம் 11ம் தேதி அல்கொய்தா தீவிரவாத அமைப்பு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயணிகள் விமானங்களை கடத்தி மோதி இடித்தன, இதே போன்று அன்று மட்டும் 4 தாக்குதல்கள் நடந்ததில் 5000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
அமெரிக்கா உடனடியாக தனது தாக்குதலை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டது, ஆப்கானிஸ்தானில் முல்லா உமர் தலைமையிலான தாலிபான்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது, முல்லா உமரும், அல்கொய்தாவின் ஒசாமா பின்லேடனும் தப்பிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானுக்கு பின் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு கதையை கிளப்பிவிட்டு ஈராக்கை கைப்பற்றி அதன் அதிபர் சதாம் உசேனை தன்னுடைய பொம்மை அரசினை கொண்டு தூக்கில் இட்டது.
சென்ற ஆண்டு ஒசாமாவையும் பாக்கிஸ்தானில் வைத்து கதையை முடித்தது அமெரிக்கா. அல்கொய்தாவின் இந்த மோசமான தீவிரவாத தாக்குதலுக்கு பின் உலகின் போக்கு மாறியது, அடக்குமுறை அரசாங்கங்களுக்கு எதிராக போராடும் விடுதலை போராளிகளையும் அல்கொய்தா போன்ற தீவிரவாதிகளையும் ஒரே மாதிரியாக பார்க்க ஆரம்பித்தன.
இதை பயன்படுத்திக்கொண்ட இலங்கை பேரிணவாத அரசு விடுதலை புலிகள் இயக்கத்தை உலகெங்கும் தடை செய்ய கோரி அதில் பெரும் வெற்றியும் பெற்றது, அதன் பின் நடந்த ஈழப்போரில் பல்வேறு நாடுகள் தீவிரவாதிகளை அழிக்க துணை நிற்கிறோம் என்று கூறிக்கொண்டு இலங்கையை ஆதரிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது அதன் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார், அத்துடன் பெரும் தொகையான அப்பாவி பொதுமக்களையும் கொன்றார்கள்.
இவைகள் அத்தனைக்கும் மூல காரணமாக தீவிரவாத அல்கொய்தா நடத்திய செப்டம்பர் 11 தாக்குதல்கள் இருந்துவிட்டது.
# செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானவர்களையும் அதனை தொடர்ந்து அரசுகள் நடத்திய போர்களில் பலியான மக்களுக்கும் நமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.