BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 September 2013

பிரேமானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு மாணவர் மர்ம சாவு

திருச்சி விராலிமலை, பாத்திமா நகரில் இயங்கி வரும் பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார். 


பலாத்காரம், கொலை போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் அனுபவித்து வந்த பிரேமானந்தா சில வருடங்களுக்கு முன்பு சிறையிலேயே இறந்து போனார். தற்போதும் அவர் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. பல வெளிநாட்டு மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.

இவ்வாறு படித்து வந்த, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கியுலன் என்ற மாணவர் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது திருச்சியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. ஆசிரமத்தில் பிரேமானந்தா ஆவி உலாவுவதாக ஒரு வதந்தியும் அங்கே உண்டு.

இந்நிலையில் இறந்த மாணவர் மனநிலை சரியில்லாதவர் என்று போலீசார் சதேகித்து விசாரணை நடத்தில் வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media