கடலூர் மாவட்டத்திலும் புதுவையிலும் கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இது வன்னியர் தலித் மோதலாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
சில நாட்களுக்கு முன் புதுவையில் இராமசாமி படையாட்சியின் சிலை உடைக்கப்பட்டது, இதை தொடர்ந்து அங்கே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது, நேற்று கடலூரில் சாவடி என்னும் ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு பேனர்கள் வைத்துள்ளனர், அதில் ஒரு பேனருக்கு போலிஸ் அனுமதி பெறாததால் போலிசிடம் பாமகவினர் புகார் தெரிவித்தனர், இதையடுத்து சிறுத்தைகள் பாமக இளைஞர் ஒருவரை தாக்க மோதல் வெடித்தது, இது போலிஸ் தடியடி வரை சென்றது, இதை தொடர்ந்து கடலூர் மற்றும் புதுவையில் மீண்டும் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இன்று புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சிலர் கிழித்து விட்டனர். இதனால் கோபமடைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். அதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது, சோடா பாட்டில்கள் பறக்க பெரும் கலவர சூழல் உருவானது. இதை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 6 முறை சுட்டனர். இதன் பின் கூட்டம் கலைந்து சென்றது. இதை தொடர்ந்து 4 கிராமங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
மரக்காணம் கலவரத்தையடுத்து கடலூர் புதுவை பகுதியில் இரு தரப்பினரும் பேனர்களை கிழித்துக்கொள்வதும் சிலை உடைப்பும் சாதிக்கலரவத்தை உண்டு செய்துவிடுமோ என்ற பதட்டம் அனைவரிடமும் நிலவுகிறது.
சில நாட்களுக்கு முன் புதுவையில் இராமசாமி படையாட்சியின் சிலை உடைக்கப்பட்டது, இதை தொடர்ந்து அங்கே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது, நேற்று கடலூரில் சாவடி என்னும் ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு பேனர்கள் வைத்துள்ளனர், அதில் ஒரு பேனருக்கு போலிஸ் அனுமதி பெறாததால் போலிசிடம் பாமகவினர் புகார் தெரிவித்தனர், இதையடுத்து சிறுத்தைகள் பாமக இளைஞர் ஒருவரை தாக்க மோதல் வெடித்தது, இது போலிஸ் தடியடி வரை சென்றது, இதை தொடர்ந்து கடலூர் மற்றும் புதுவையில் மீண்டும் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இன்று புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சிலர் கிழித்து விட்டனர். இதனால் கோபமடைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். அதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது, சோடா பாட்டில்கள் பறக்க பெரும் கலவர சூழல் உருவானது. இதை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 6 முறை சுட்டனர். இதன் பின் கூட்டம் கலைந்து சென்றது. இதை தொடர்ந்து 4 கிராமங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
மரக்காணம் கலவரத்தையடுத்து கடலூர் புதுவை பகுதியில் இரு தரப்பினரும் பேனர்களை கிழித்துக்கொள்வதும் சிலை உடைப்பும் சாதிக்கலரவத்தை உண்டு செய்துவிடுமோ என்ற பதட்டம் அனைவரிடமும் நிலவுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.