BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 September 2013

ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல

ஆதார் அட்டை பெறுவது கட்டயாம் அல்ல. விருப்பபட்டால் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

மகாராஷ்டிர அரசு திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது.

இந்த விசாரணையில், ஆதார் அட்டை பெறுவது அவரவர் விருப்பம் என்று பதில் தந்துள்ளது மத்திய அரசு.

விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கும் திட்டம் 2009-ல் ஆரம்பிக்கப் பட்டது. இந்த திட்டத்திற்காக மட்டும் இது வரை ரூ. 50,000 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media