BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 September 2013

சாதி பிரச்சினையை கிளப்பி விஜயகாந்த்தை திட்டும் தாது மணல் திருட்டு கும்பல்

செய்யும் திருட்டு வேலைக்கு சாதி ஒரு கேடயமா? சாதி பிரச்சினையை கிளப்பி விஜயகாந்த்தை திட்டும் தாது மணல் திருட்டு கும்பல்



தேமுதிக 9ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தபால்தந்தி காலனி மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் மணல்திருட்டு கும்பல் குறித்து கடும் விமர்சனங்களை வைத்தனர்.

100 ஏக்கர் இடத்தை பதினெட்டாயிரம் ரூபாய்க்கும், 40 ஏக்கர் இடத்தை நாற்பது ரூபாய்க்கும் குத்தகைக்கு எடுத்து பல கோடிகளை அள்ளியுள்ள மணல் கொள்ளை தலைவன் வைகுண்டராஜனை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? வைகுண்டராஜ யாருடைய வாரிசு என்றும் இதற்கு அரசும் துணை போகிறது என்று பேசியிருந்தார்கள்.

இதற்கு நாடார் சாதி பெயரை பயன்படுத்தி வைகுண்டராஜன் கும்பலும் அவருக்கு ஆதரவான கும்பலும் விஜயகாந்தை கடுமையாக தாக்கி போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர், மேலும் வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் நேற்று தூத்துக்குடியில் கொடும்பாவிகளைக் கொளுத்திப் போராட்டம் நடத்தினர்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media