10 படங்களை இயக்கியும் பல படங்களில் நடித்தும் உள்ள சேரனுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையாம்! யார் சொன்னது இது?
இளைய மகளின் காதல் விவகாரத்திலிருந்து மீண்டு வந்த டைரக்டர் சேரன் தான் சொந்தமாக தயாரித்து, டைரக்ட் செய்த ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஆடியோ பங்ஷனை கடந்த 15-ஆம் தேதி மகிழ்ச்சியாக சத்யம் தியேட்டரில் நடத்தினார்.
பாலு மகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர், லிங்குசாமி, சமுத்திரக்கனி,அமீர், சீமான் என தமிழ்சினிமாவின் முன்னணி டைரக்டர்கள் பலரும் இந்த பங்ஷனில் ஆஜராகியிருந்தார்கள்.
“பல தேசிய விருதுகளை வாங்கி விட்ட சேரனுக்கு இதுவரை சொந்தமாக ஒரு வீடு இல்லை” என்று வேதனைப்பட்டார் டைரக்டர் அமீர்.
விழாவில் கலந்துகொண்ட டைரக்டர் அமீர் பேசியதாவது :
“சேரன் ஒரு சிறந்த படைப்பாளி நல்ல நடிகர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தன் படத்தில் எந்த நடிகரும் நடிக்க முன் வரவில்லை என்ற ஆதங்கத்திலும், இன்றைய பெரும்பான்மை டைரக்டர்கள் சினிமாவில் நடிக்கும் ஆசையோடு தான் இங்கு வந்தவர்கள் என்பதாலும் ஒரு டைரக்டர் நடிக்க வருகிறார். ஆனால் நடிகனாக மாறிய ஒரு டைரக்டர் கடைசி வரையிலும் நடிகராகவே இருந்து விட முடியாது.
ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் சேரனின் 10-வது படம் என்றாலும், அவர் இதுவரை 13 படங்களில் நடித்து விட்டார் என்றால் ஒரு நடிகராக எவ்வளவு வேகமாக ஓடியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல தேசிய விருதகளையும், பல பிலிம்ஃபேர் விருதுகளையும் சேரன் வாங்கியிருக்கிறார் என்று பெருமைப்பட்டாலும், அவருக்கு சொந்த வீடு இல்லை என்ற குறை எனக்குள் இருக்கிறது.
அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களின் திருமணத்தைப் பற்றியும் சேரன் சிந்திக்க வேண்டும். திருமணமாகி செல்லும்போது ஆளுக்கு இரண்டு விருதுகள் என கையில் கொடுத்து அனுப்ப முடியாது. எனக்கும் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். சேரன் வீடு வாங்கியதும், நானும் வீடு வாங்கி விடுவேன். வீடு வாங்கும் முயற்சி இந்த படத்திலிருந்தே ஆரம்பிக்க, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் அவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைய என் வாழ்த்துகள் என்றார்.
இளைய மகளின் காதல் விவகாரத்திலிருந்து மீண்டு வந்த டைரக்டர் சேரன் தான் சொந்தமாக தயாரித்து, டைரக்ட் செய்த ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஆடியோ பங்ஷனை கடந்த 15-ஆம் தேதி மகிழ்ச்சியாக சத்யம் தியேட்டரில் நடத்தினார்.
பாலு மகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர், லிங்குசாமி, சமுத்திரக்கனி,அமீர், சீமான் என தமிழ்சினிமாவின் முன்னணி டைரக்டர்கள் பலரும் இந்த பங்ஷனில் ஆஜராகியிருந்தார்கள்.
“பல தேசிய விருதுகளை வாங்கி விட்ட சேரனுக்கு இதுவரை சொந்தமாக ஒரு வீடு இல்லை” என்று வேதனைப்பட்டார் டைரக்டர் அமீர்.
விழாவில் கலந்துகொண்ட டைரக்டர் அமீர் பேசியதாவது :
“சேரன் ஒரு சிறந்த படைப்பாளி நல்ல நடிகர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தன் படத்தில் எந்த நடிகரும் நடிக்க முன் வரவில்லை என்ற ஆதங்கத்திலும், இன்றைய பெரும்பான்மை டைரக்டர்கள் சினிமாவில் நடிக்கும் ஆசையோடு தான் இங்கு வந்தவர்கள் என்பதாலும் ஒரு டைரக்டர் நடிக்க வருகிறார். ஆனால் நடிகனாக மாறிய ஒரு டைரக்டர் கடைசி வரையிலும் நடிகராகவே இருந்து விட முடியாது.
ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் சேரனின் 10-வது படம் என்றாலும், அவர் இதுவரை 13 படங்களில் நடித்து விட்டார் என்றால் ஒரு நடிகராக எவ்வளவு வேகமாக ஓடியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல தேசிய விருதகளையும், பல பிலிம்ஃபேர் விருதுகளையும் சேரன் வாங்கியிருக்கிறார் என்று பெருமைப்பட்டாலும், அவருக்கு சொந்த வீடு இல்லை என்ற குறை எனக்குள் இருக்கிறது.
அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களின் திருமணத்தைப் பற்றியும் சேரன் சிந்திக்க வேண்டும். திருமணமாகி செல்லும்போது ஆளுக்கு இரண்டு விருதுகள் என கையில் கொடுத்து அனுப்ப முடியாது. எனக்கும் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். சேரன் வீடு வாங்கியதும், நானும் வீடு வாங்கி விடுவேன். வீடு வாங்கும் முயற்சி இந்த படத்திலிருந்தே ஆரம்பிக்க, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் அவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைய என் வாழ்த்துகள் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.