உயிருடன் இருக்கும் அமைச்சருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க ஊழியர்கள் நடத்தியநாடகம்?
லஞ்சம் வாங்குவதற்கு தடையாக இருந்ததால் ஆன்லைன் சான்றிதழ் வழங்குவதை முடக்க சதியா?
சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்புச் சான்று வழங்கும் முறை அறிமுகமானது. இது ஏற்கனவே, கொள்ளை லாபம் பார்த்து வந்த அப்பிரிவு ஊழியர் சிலருக்கு பேரிழப்பை தந்தது. சர்ச்சையை ஏற்படுத்தி, "ஆன்லைன்' முறையை முடிவுக்கு கொண்டு வர ஒரு இறப்புச் சான்றிதழ் நாடகம் நடந்திருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மதுரை தெற்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாதுரை இருவர் பெயரில் இறப்பு சான்றிதல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப் பட்டன. உயிருடன் இவர்கள் இருக்கும் போது இறப்பு சான்றிதல் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது.
ஆன்லைன் முறையின் சீர்கேடு இதுதான் என உணர்த்தவே அந்த துறையை சேர்ந்த சிலரே இந்த வேலையை செய்ததாக தெரிய வந்துள்ளது. இப்படி நடந்தால் ஆன்லைன் முறை நிறுத்தப்படும் என்றே அவர்கள் இவ்வாறு செயல்பட்டதாக தெரிகிறது.
சைபர் கிரைம் போலீஸ் விசாரணையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் மாநகராட்சி சர்வர், இணையதளம் முழுமையும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
லஞ்சம் வாங்குவதற்கு தடையாக இருந்ததால் ஆன்லைன் சான்றிதழ் வழங்குவதை முடக்க சதியா?
சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்புச் சான்று வழங்கும் முறை அறிமுகமானது. இது ஏற்கனவே, கொள்ளை லாபம் பார்த்து வந்த அப்பிரிவு ஊழியர் சிலருக்கு பேரிழப்பை தந்தது. சர்ச்சையை ஏற்படுத்தி, "ஆன்லைன்' முறையை முடிவுக்கு கொண்டு வர ஒரு இறப்புச் சான்றிதழ் நாடகம் நடந்திருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மதுரை தெற்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாதுரை இருவர் பெயரில் இறப்பு சான்றிதல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப் பட்டன. உயிருடன் இவர்கள் இருக்கும் போது இறப்பு சான்றிதல் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது.
ஆன்லைன் முறையின் சீர்கேடு இதுதான் என உணர்த்தவே அந்த துறையை சேர்ந்த சிலரே இந்த வேலையை செய்ததாக தெரிய வந்துள்ளது. இப்படி நடந்தால் ஆன்லைன் முறை நிறுத்தப்படும் என்றே அவர்கள் இவ்வாறு செயல்பட்டதாக தெரிகிறது.
சைபர் கிரைம் போலீஸ் விசாரணையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் மாநகராட்சி சர்வர், இணையதளம் முழுமையும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.