BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 8 September 2013

முசாஃபர் நகர் கலவரம் 12 பேர் பலி, மூல காரணம் ஈவ் டீசிங், 299 ஃபேஸ்புக் பயனாளார்கள் மீது வழக்கு

மேற்கு உத்திரபிரதேசம் முசாஃபர் நகர் கலவரம் 12 பேர் பலி, மூல காரணம் ஈவ் டீசிங், 299 ஃபேஸ்புக் பயனாளார்கள் மீது வழக்கு, இராணுவம் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது


மேற்கு உத்திரபிரதேசம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி ஈவ்டீசிங் சம்பவத்தையடுத்து  3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர், அதைத்தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இரு சமுதாயங்களுக்கிடையான மோதல் அபாயம் அதிகரித்தது, இந்நிலையில் நேற்று மகா பஞ்சாயத்து கூடியது, அதில் போலிஸ் ஒரு சமுதாயத்துக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது, இதில் சில பாஜக எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர், ஆனால் இந்த பஞ்சாயத்து கூட்டத்தை சட்டவிரோதமானது என்று காவல்துறை கூறியது.

பஞ்சாயத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மற்றொரு சமுதாயத்தால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து நடந்த கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர், இதில் ஃப்ரீலான்ஸ் டிவி நிருபர் ஒருவரும், போலிசால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டோகிராபர் ஒருவரும் கொல்லப்பட்டார்கள்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் இராணுவபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில்  உத்திரபிரதேச அரசு வாக்குவங்கியை குறிவைத்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இளைஞர் என்று ஃபேஸ்புக்கில் ஒரு போலியான வீடியோ  பகிரப்பட்டதில் இரண்டு சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்ச்சியை தூண்டும் விதமாக செயல்பட்டார்கள் என இந்த வீடியோவை பகிர்ந்த 299 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media