BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 24 October 2013

இந்தியாவை மிரட்டும் இலங்கை தூதர்..

இலங்கை பிரச்சினையில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறியது

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம், காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.

கனடா தவிர மற்ற அனைத்து நாடுகளும் பங்கேற்கிறது எனவே அது பங்கேற்காத நாட்டிற்குதான் பாதிப்பு, பங்கேற்காத நாடு தான் தனிமைப்படுத்தப்படும், இலங்கை அல்ல என்று மிரட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களின் நிலை பற்றி தமிழக சட்டமன்றத்திற்கு தெரியவில்லை என்றும் பிரதமர் மன்மேகன் சிங்கின் பயணம் குறித்து இந்திய அரசு மட்டுமே முடிவு செய்ய உரிமை உள்ளது‘ என்றும் இலங்கை தூதர் கூறியுள்ளார்.

# தமிழனை இந்திய அரசு மதிக்காது என்பது இலங்கைக்கும் தெரிந்து இருப்பதால் தான் இந்த மிரட்டல்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media