BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 8 November 2013

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவது தவறு, சரியான திட்டங்கள் இல்லை - இஸ்ரோ முன்னாள் தலைவர் கடும் விமர்சனம்.

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவது தவறு, இந்தியாவிடம் சரியான திட்டங்கள் இல்லை -  இஸ்ரோ முன்னாள் தலைவர் கடும் விமர்சனம்.



செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் என்ற விண்கலம் வெற்றிகரமாக ஏவியுள்ளது இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழகம், இதை சீனாவும் பாராட்டியுள்ள நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விண்வெளி குறித்தான செயல்பாடுகளில் இந்தியா மெதுவாக நத்தை வேகத்தில் செயல்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகள் குறித்தான தெளிவான திட்டமில்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் தவறானது, கடல் ஆராய்ச்சிக்கு இன்னொரு செயற்கை கோளை ஏவ வேண்டும், சீனா கடந்த சில ஆண்டுகளில் 10 வின்வெளி வீரர்களை உருவாக்கியுள்ளது, சீனாவுக்கு விண்வெளி ஆய்வு மையம் இருக்கிறது. இது தொடர்பான 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. 2015-ம் ஆண்டில் அது செயல்பாட்டுக்கு வரும், ஆனால் நம்மிடம் இது எதுவும் இல்லாத நிலையில் இது குறித்த ஆராய்ச்சிகளை பணிகளை செய்ய வேண்டிய இந்தியா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது தேவையில்லாதது என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media