BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 24 November 2013

கோடிகளில் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற அர்விந்த் கேஜ்ரிவால் பேச்சுக்கு ஐ.ஆர்.எஸ் சங்கம் மிரட்டல்

ரெவின்யூ ஆபிசராக நான் கோடிகளில் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற அர்விந்த் கேஜ்ரிவால் பேச்சுக்கு ஐ.ஆர்.எஸ் சங்கம் மிரட்டல்



அர்விந்த் கேஜ்ரிவால் வருமானவரித்துறையில் கமிஷனராக பதவி வகித்தவர், அன்னா ஹசாரே உடன் இருந்தவர் தற்போது ஆம் ஆத்மி என்ற கட்சி ஆரம்பித்து வெளிப்படையான அரசும், கட்சிகளும் நிலவ வேண்டும் என்று கோரி வருபவர், தற்போது இவர் கட்சி மீது தேர்தல் நிதி தொடர்பாக சில புகார்களை பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் கிளப்பி வருகின்றன.

இந்நிலையில் தான் பணம் சம்பாதிக்க வரவில்லை என்றும் வருமான வரித்துறையில் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும் என்னும் போது தான் கமிஷனராக இருந்திருக்கிறேன், எத்தனை கோடிகள் சம்பாதித்திருக்க முடியுமென்று பாருங்கள் என்றார்.

அர்விந்த் கேஜ்ரிவால் உண்மையை இப்படி பட்டென்று போட்டு உடைத்தது ஐ.ஆர்.எஸ் சங்கத்திற்கு அவமானமாக போய்விட்டதாம், தற்போது சங்கத்தின் இமேஜை காக்க வேண்டுமென்பதால்  அர்விந்த் கெஜ்ரிவால் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media