BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 24 November 2013

ஒரே நாளில் 34 இலட்சம் வழக்குகள் மக்கள் நீதிமன்றங்களில் முடிக்கப்பட்டன‌

ஒரே நாளில் நாடு முழுவதும் 34 இலட்சம் வழக்குகள், தமிழ்நாட்டில் 12 இலட்சம் வழக்குகள் மக்கள் நீதிமன்றங்களில் முடிக்கப்பட்டன‌

நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் பல வழக்குகளை முடிக்க லோக்-அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன, குறிப்பாக போக்குவரத்து குற்றங்கள் இழப்பீடுகள் தொடர்பான வழக்குகள், குடும்ப சிக்கல்கள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

நேற்று மெகா லோக் அதாலத் என்ற தினம் கடைபிடிக்கப்பட்டு நேற்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாடெங்கும் வழக்கு விசாரணை நடைபெற்று மொத்தம் 34 இலட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டன, தமிழகத்தில் மட்டும் 12 இலட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டன.

நேற்று ஒரே நாளில் மக்கள் நீதிமன்றங்கள் மூலமாக ரூபாய் 850 கோடிக்கான இழப்பீடுகள் வழங்கப்பட உத்தரவிடப்பட்டது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media