BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 18 November 2013

அர்விந்த் கேஜ்ரிவால் மீது இங்க் வீச்சு - கெஜ்ரிவாலை கண்டு பயப்படுகிறார்கள் பாஜக, காங்கிரஸ்

அர்விந்த் கேஜ்ரிவால் மீது இங்க் வீச்சு - கெஜ்ரிவாலை கண்டு பயப்படுகிறார்கள் பாஜக, காங்கிரஸ்



அர்விந்த் கேஜ்ரிவால் ஐஏஎஸ் ஆபிசராக இருந்து பின் அன்னா ஹசாரே உடன் இணைந்து ஜன்லோக்பால் உட்பட பல கோரிக்கைகளுக்காக போராடியவர், ஒரு கட்டத்தில் ஹசாரேவிடமிருந்து பிரிந்து பின் ஆம் ஆத்மி கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார், கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லி மருத்துவ கல்லூரி மாணவி பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின் வெடித்த போராட்டத்தில் பங்கு வகித்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள்.

டிசம்பர் 4ம் தேதி டில்லி மாநிலத்துக்கு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸா? பாஜகவா என்ற நிலையை மாற்றி ஆம் ஆத்மியும் ஆட்சிக்கு வரும் அளவுக்கு கடுமையான போட்டியை தருகின்றது. இந்நிலையில் இன்று அர்விந்த் கெஜ்ரிவால் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும் போது அவர் அருகில் இருந்து ஒருவர் இங்க் (மை)கை கேஜ்ரிவால் மீது எறிந்தார், பேப்பர் பந்தையும் எறிந்தவர் தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால் ஏமாற்றி விட்டதாக கூவினார்.

கேஜ்ரிவால் மீது மை வீசியவர் பிறகு பேசிய போது அவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றும் பாஜக தொண்டர் என்றும் தெரிய வந்தது, கேஜ்ரிவால் அன்னா ஹசாரே பெயரை தனது கட்சிக்காக தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் பாஜகவும், காங்கிரஸ்சும் எங்கள் கட்சியின் வளர்ச்சியையும் புகழையும் கண்டு பயப்படுகிறார்கள் என்று கூறினார்.

# ஒருத்தர் நல்லது செய்ய வந்தால் விடமாட்டிங்களே!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media