BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 29 November 2013

விடியும்முன் - விமர்சனம், பட்ஜெட் படத்தில் ஒரு பக்கா திரில்லர்



விடியும்முன் திரைப்படம் சென்ற வாரமே பத்திரிக்கையாளர்கள் காட்சி  திரையிடப்பட்டிருந்தது,
தற்போது எவ்வளவு பெரிய மாஸ் படமாக இருந்தாலும் ரிலீஸ்க்கு முன்பே பத்திரிக்கை காட்சிகளை வெளியிடுவதில்லை, படம் எப்படி இருக்கும் இன்று இவர்கள் சொல்ல உடனடியாக ஃபேஸ்புக், டிவிட்டர் முழுதும் பரவி முதல் நாள் முதல் காட்சி கலெக்சனே குறைந்துவிடுகிறது என்பதால் இது சமீபகாலமாக கடைபிடிக்கப்படுகிறது.

மாஸ் படங்களுக்கே இந்த நிலை என்னும் போது புதுமுகங்கள், லோ பட்ஜெட் படத்தை ரிலீஸ்க்கும் ஒரு வாரம் முன்பே பத்திரிக்கை காட்சி திரையிட வேண்டுமென்றால் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்கும். அப்படி ஒரு தன்னம்பிக்கையோடு சில நாட்கள் முன்பே பத்திரிக்கை காட்சி போட்டு காண்பிக்கப்பட்ட படம் தான் இந்த விடியும்முன்.

அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை, படம் செம திரில்லர்.  இந்த படத்தை வெறும் திரில்லர் என்று மட்டும் வகைப்படுத்திவிட முடியாது, ஆரண்யகாண்டம் படம் போன்று சமூகத்தின் இருட்டுக்குள் வாழ்பவர்களை பற்றிய கதையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் வடித்துள்ள ஒரு படம்.

ஒரு சிறுமியை விபச்சாரத்தில் தள்ள முயலுகிறார்கள் அந்த சிறுமியை அவர்கள் கொல்ல முயலுகிறார்கள் அந்த சிறுமியை காப்பாற்ற முனையும் பூஜா ஒரு பாலியல் தொழிலாளி இவர்களை கொல்ல துரத்தும் இரண்டு வெவ்வேறு ஆட்கள், கதை இது தான், கதைக்களம் கதை மாந்தர்கள் சமூகத்தின் இருட்டுக்குள் வாழ்பவர்களை பற்றியது என்பதும் சஸ்பன்சே கதையாகவும் அந்த கதையே சஸ்பென்சாகவும் உள்ளது.

இயக்குனர் பாலாஜி கே குமார் பட்ஜெட் படத்தில் ஒரு பக்கா திரில்லரை கொடுத்து சாதித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media