BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 December 2013

பாஜக, காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கடிதம் எழுந்திய‌ அந்த 18 பிரச்சினைகள்

ஆம் ஆத்மி கட்சி டில்லியில் ஆட்சி அமைப்பதென்றால் 18 பிரச்சினைகளுக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவும் நிலைப்பாடும் தேவை என்று அர்விந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ்க்கும் பாஜகவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

1. விஐபிக்கள் சிவப்பு சுழல் விளக்கு போட்டுக்கொண்டு சுற்றுவதை அனுமதிக்க முடியாது


2. ஜன்லோக்பால் மசோதாவை அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது ஒப்புக்கொண்ட அம்சங்களுடன் நிறைவேற்ற வேண்டும் சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

3. மக்கள் நேரடியாக "மொகல்லா சபா" மூலம் முடிவெடுப்பார்கள், இது ஒரு ஒரு வட்டத்திலும் காலனியிலும் அமைக்கப்பட வேண்டும்

4. ஆம் ஆத்மி கட்சி டில்லியை முழுமையான மாநிலமாக அங்கீகரிக்க கோருகிறது, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி வளர்ச்சி அத்தாரிட்டி மற்றும் காவல்துறைகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்

5. ஆம் ஆத்மி கட்சி தனியார் மயமாக்கப்பட்ட மின்சாரம் வழங்கும் கம்பெனிகளில் சிறப்பு ஆடிட்டிங்களை நடத்தா வேண்டும், இதில் பங்கேற்க விரும்பாத நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

6. மின்சார மீட்டர்களை சோதிக்க வேண்டும்

7. ஒரு ஆளுக்கு தினம் 220லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டுமே? அது எங்கே?

8. ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்கப்படாத குடியிருப்புகளை முறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறது, 30% டில்லி மக்கள் அதில் வாழ்கிறார்கள்

9. குடிசைகளில் வாழும் மக்களுக்கு சுகாதாரமான தரமான வீடுகளை அமைத்து தருவதற்கு ஆதரவு தர வேண்டும்

10. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு ஆதரவு தர வேண்டும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

11. சாதாரண வியாபாரிகளுக்கு உள் கட்டமைப்பான சாலைகள், தண்ணீர் வசதிகள் செய்து தர ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது

12. சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கிறது

13. டில்லியில் உள்ள விவசாயிகளுக்கு வசதிகளும், மானியங்களும் வழங்க விரும்புகிறது

14. 500 அரசு பள்ளிகளை தொடங்குதல், தனியார் பள்ளிகளில் நன்கொடை வாங்குவதை நிறுத்துவது, பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக மாற்றுவது குறித்து பாஜக காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

15. ஆம் ஆத்மி கட்சி வசதிகள் நிறைந்த புதிய மருத்துவமனைகளை திறக்க விரும்புகிறது

16. பெண்கள் தொல்லைகளுக்குள்ளாவதை தடுக்க புதிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும், இது தொடர்பான வழக்குகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்

17. போதுமான அளவு நீதிமன்றங்களை திறந்து தேவையான அளவு நீதிபதிகளை நியமித்து வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

18. ஆம் ஆத்மி கட்சி இந்த பிரச்சினைகளை தீர்க்க‌ டெல்லி மாநகராட்சி ஆதரித்து உதவுமா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறது.

எல்லா சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்து இவைகளையெல்லாம் தீர்க்க தான் மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளார்கள்., காங்கிரஸ், பாஜக இதையெல்லாம் அவர்கள் செய்யவில்லை என்று தானே மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள், நீங்கள் அவர்களிடமே இதை செய்ய கேட்டால் பிறகு நீங்கள் எதற்கு?

# வாழைப்பழத்தை உரித்து தருவது மட்டுமின்றி ஊட்டியும் விட சொல்றீங்களா கேஜ்ரிவால் ஜி


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media